tamilnadu

img

கொரோனாவும் தடுப்பு மருந்தும்...

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  அதற்கு தடுப்புமருந்து கண்டுபிடிப்பதற்கு உலகில்உள்ள எல்லா நாடுகளும் முழுமூச்சோடு போட்டி போட்டுக்கொண்டுகளத்தில் இறங்கியிருக்கின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முறையில் பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன.கண்டுபிடித்த மருந்தை மனிதர்களுக் குக் கொடுத்து சோதனை செய்வது அதில் முக்கிய கட்டம் ரஷ்யா, மனிதர்களுக்குச் சோதனை செய்து பார்க்கும் கட்டத் தைத் தொட்டுவிட்டதாகவும் உலகில் கொரோனா தீ நுண்மி பாதிப்புக்கு தடுப்புமருந்தை முதன்முதலில் கண்டுபிடித்ததாகவும் அறிவித்தது.

ரஷ்யாவில் முதல் மருத்துவப் பல்கலைக்கழகமான செச்சனோவ் பல்கலைக் கழகம் கொரோனாவுக்கான தடுப்புமருந்தை கடந்த மாதம் 38 தன்னார்வலர்களுக்கு கொடுத்து சோதனை செய்துபார்த்திருக்கிறது. இதேபோன்று, கமலேநேஷனல் ரிசர்ச் சென்டர் ஃபார் எபிடெமாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தைரஷ்ய ராணுவம் தனது படையினருக்குக்கொடுத்து சோதனை செய்து பார்த்திருக்கிறது. 

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சிமுடிந்துவிட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும் செச்சனோவ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எலீனா கூறியிருக்கிறார். கடந்த மாதம் சோதனை அடிப்படையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தை 18 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள தன்னார்வலர்களுக்குக் கொடுத்து 28 நாட்கள் அவர்களை தனிமையில் வைத்திருந்ததாகவும் இன்னும் ஆறு மாதங்கள் வரை அவர்களை கண்காணிப்பில் வைத்திருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊசியின் மூலம் தடுப்பு மருந்து அவர்களுக்குச்செலுத்தப்பட்டதும் அவர்களின் உடல் வெப்பநிலை உயர்ந்திருக்கிறது. கடுமையான தலைவலி வந்திருக்கிறது. ஆனால் 24 மணி நேரங்களில் அவர் களின் உடல்நிலை இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்கிறார் எலீனா.ரஷ்யாவில் இந்த இரண்டு ஆராய்ச்சிகள் மட்டுமே நடத்தப்படவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இந்த இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்பு முந்தியிருக்கிறது. ரஷ்யா மட்டுமல்ல; அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருக்கின்றன.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் நிறுவனம், புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைரலாஜி நிறுவனம் ஆகியவைஇணைந்து கோவாக்ஸின் மருந்து கண்டு பிடிப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் லண்டனில் உள்ளஇம்பீரியல் காலேஜ் ஆகியவை தடுப்புமருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் மாடர்னர் நிறுவனம்,நோவாவக்ஸ் நிறுவனம் ஆகியவையும், சீனாவில் வுஹான் இன்ஸ்டிடியூட், சினோஃபார்ம் நிறுவனம், சினோவாக் நிறுவனம், பீஜிங் இன்ஸ்டிடியூட் ஆஃப்பயோடெக்னாலஜி என பல நிறுவனங்கள் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. ஜெர்மனியில் பயோஎன்டெக், ஃபைஸர்,ஃபோசன் பார்மா ஆகிய நிறுவனங்களும் ஆஸ்திரேலியாவில் இரண்டு நிறுவனங்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் போட்டியில் இறங்கி பல கட்டஆய்வுகளைச் செய்து வருகின்றன. இந்த போட்டியில் யார் முந்துவார்கள்;  வெற்றி யாருக்குக் கிடைக்கும் என்பதுவிரைவில் தெரியும்.

ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் இருந்து அதை மக்கள் பயன்பாட் டுக்கு கொண்டு வருவதற்குள் பல்வேறுகட்டங்களில் அதற்குரிய கால இடைவெளியில் வெவ்வேறு விதமாக பரிசோதிக்கப்பட்டு, எல்லா நாட்டிலும், எல்லா மக்களுக்கும், எல்லா வயதினருக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இந்த மருந்து காப்பாற்றும் என்ற உறுதிகிடைத்த பிறகே அதை சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும். அப்படியல்லாமல் நாங்கள்தான் முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்தோம் என்று பெருமைக்காக, அவசர அவசரமாக சந்தைக்கு கொண்டுவர அரசே நிர்ப் பந்திக்கக்கூடாது. அப்படி செய்வது ஆபத்தானதாக இருக்கும். அந்த வகையில் அறிவியலை அரசியல் நிர்ப்பந்திக்கக்கூடாது. 

இந்நிலையில் இஸ்ரேலும், சீனாவும் கூட தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்திருப்பதாகவும், விரைவில் சோதனை வெற்றி அடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படி உலகம் முழுவதும் ஒவ்வொரு மூலையில் இருந்தும்நம்பிக்கை ஊட்டும் வகையில் வரும்தகவல்கள் பொதுமக்களுக்கு ஆறுதலைகொடுக்கிறது. ஆனால் இந்த மருந்துகளை கண்டுபிடிப்பதிலும் உருவாக்குவதிலும் கூட போட்டிகளும் நாட்டுக்குநாடு விட்டுக்கொடுக்காத உணர்வுகளும் எழுந்து வருவது வேதனை அளிக்கிறது. இதனால் மருந்துகள் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உலக சுகாதார நிறுவனம் என்ற அமைப்பு அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடந்தாலும் அதன் முன்னேற்றத்தை பொறுத்து அத்தனை ஆய்வுகளையும் ஒருங்கிணைத்து விரைவாக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுவது மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது.

===ஐ.வி.நாகராஜன்===

;